அவசரமாக சொந்த ஊர் திரும்பிய அதிரடி வீரர் ரிங்கு சிங் !!

சென்னை:
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.

அவரது தந்தை கான்சந்த் சிங் உடல்நலக் குறைவால் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ரிங்கு சிங் அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரையிறுதிப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *