கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக நாளை விஜய் சிபிஐ முன்பு ஆஜராக சம்மன்!!

சென்னை:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.


இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்தை இன்று மறுதணிக்கை செய்யப்படும் என அறிவித்த நிலையில், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் பார்ப்பது ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என அழுத்தம் தரப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கரூர் வழக்கிற்காக நாளை சி.பி.ஐ. முன் விஜய் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் அரசியல் அழுத்தமே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *