“லீடர்” திரைப்படம் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியகும் என்று தகவல்!!

சென்னை:
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.

ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தேதி பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், “லீடர்” திரைப்படம் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

“லீடர்” திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 21-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *