மானாமதுரையில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்ட இளைஞர் இறந்​தது, காவல் மரண​மாக இருந்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் – உயர் நீதி​மன்​றம் உறுதி…..

மதுரை / சிவகங்கை:
மானாமதுரையில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்ட இளைஞர் இறந்​தது, காவல் மரண​மாக இருந்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் மானாமதுரையில் போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​த​தாகக் கூறப்​படும் ஆகாஷ் டெல்​சனின் தந்தை ராஜேஷ்கண்​ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனுவில் சிபிசிஐடி விசா​ரணை, உரிய இழப்​பீடு, உடற்​ கூறாய்வு வீடியோ பதிவு உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலியுறுத்தியிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி, உடற்கூறாய்வை வீடியோ​வில் பதிவு செய்​ய​வும் ஆகாஷின் உறவினர் நடத்தி வரும் சாலை மறியலை கைவிட​வும் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில் நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி முன் அரசு வழக்​கறிஞர் ஆஜராகி, தேசிய நெடுஞ் ​சாலை​யில் நடந்துவரும் மறியல் போராட்​டத்​தைக் கைவிட நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் போராட்​டம் தொடர்​கிறது. இதனால் மக்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்களை உடனே கலைந்து செல்ல நீதி​மன்​றம் உத்​தர​விட கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிப​தி, இன்​னும் ​மக்​களைச் சிரமப்​படுத்​தும் வகை​யில் ஏன் மறியல் போராட்​டத்தை நடத்​துகிறீர்​கள் எனக் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு அரசி​யல் கட்​சிகளே போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளதாக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, இதனை வைத்து அரசி​யல் செய்ய நேரமில்​லை. ஒரு​வேளை அது காவல் மரண​மாக இருந்​தால் நீதி​மன்​றம் உரிய நடவடிக்கை எடுக்​கும்.

ஆகாஷின் பெற்​றோர் ஊடகங்​கள் வாயி​லாகப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளோரைக் கலைந்து செல்ல அறி​வுறுத்த வேண்​டும். விசா​ரணை நாளை தள்​ளிவைக்​கப்​படு​கிறது என்றார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இதனிடையே இந்த விவாகரம் தொடர்பாக நேற்று மானாமதுரை காவல் நிலை​யத்தில் சிபிசிஐடி எஸ்பி ஷாஜி​தா, ஆய்​வாளர்​கள் சரவணன், கீதா ஆகியோர் விசா​ரணை நடத்​தினர்.

அதே​போல், மதுரை குற்​றவியல் நீதித்​துறை நடு​வர் ஹரிஹர சுதனும் ஆகாஷ்டெல்​சனை கைது செய்த போலீ​ஸாரிட​ம் விசா​ரணை நடத்​தினார்.

உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​ பேரில் காவல் நிலை​ய சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்து பாது​காக்க, மாவட்ட வரு​வாய் அலு​வலர் செல்​வசுரபி, மானாமதுரை நகராட்சி ஆணை​யர் கோபால​கிருஷ்ணன் உள்​ளிட்ட அதி​காரி​கள் குழுவினரும் காவல் நிலை​யத்​தில் ஆய்வு செய்​தனர்.

மேலும் தேசிய தகவல் மைய அதி​காரி​கள் சிசிடிவி காட்​சிகளை தனியாக பதிவு செய்து எடுத்​துச் சென்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *