இஸ்​ரேல், அமெரிக்​கா-ஈ​ரான் போர் காரணமாக, காஸ் தட்டுப்பாடு: சென்னையில் 10,000 டீக்கடைகளை மூடும் சூழல்!!

சென்னை:
இஸ்​ரேல், அமெரிக்​கா-ஈ​ரான் போர் காரணமாக, காஸ் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, பொது​மக்கள், வியா​பாரி​கள், ஓட்​டல்​கள் சங்​கம் உள்​ளிட்​டவை தெரி​வித்த கருத்​து​கள்:

சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன்: தற்​போது வரை சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் உள்ள அம்மா உணவகங்​களில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு இல்​லை. போதிய சிலிண்​டர்​கள் கையிருப்​பில் உள்​ளன.

அதே​போல், சென்​னை​யில் எல்​பிஜி மூலம் இயங்​கும் மின் மயானங்​களில் காஸ் தட்​டுப்​பாடு இது​வரை இல்​லை. வரும் நாட்​களில் பிரச்சினை எழாத​படி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு மாநிலத் தலை​வர் விக்​கிரம​ராஜா: தற்​போது ஓட்​டல்​களுக்கு தேவை​யான சிலிண்​டர்​கள் கிடைப்​ப​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இன்​னும் 2 தினங்​கள் இந்த தட்​டுப்​பாடு தீவிரமடைய​லாம்.

ஓட்​டல்​களில் தினசரி தேவைக்​கேற்​ப சிலிண்​டர்​கள் வாங்​கப்​படு​கின்​றன. அவற்றை சேமித்து வைக்​கத் தனி​யாக கிடங்​கு​கள் எது​வும் இல்லை என்​ப​தால், பதுக்​கல் செய்ய முடி​யாது.

ஒரு​நாள் சிலிண்​டர் கிடைக்​க​வில்லை என்​றாலும் உணவகங்​களை நடத்த முடி​யாத சூழல் ஏற்​படும். இது மக்​களுக்​கான உணவு விநி​யோகத்​தைப் பாதிப்​ப​தோடு, அத்​தி​யா​வசிய உணவுப் பொருட்​களின் விலை உயர்​வுக்​கும் வழி​வகுக்​கும்.

இந்​தச் சிக்​கலை தவிர்க்க மத்​திய, மாநில அரசுகள் மற்​றும் பெட்​ரோலி​யத் துறை அமைச்​சகத்​துக்கு கோரிக்கை மனு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

உணவகங்​களை அத்​தி​யா​வசி​யச்சேவை​கள் பராமரிப்​புச் சட்​டத்​தின் கீழ் கொண்டு வரு​வதன் மூலம், சிலிண்​டர் தட்​டுப்​பாடின்றி கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும். தற்​போதைக்கு உணவகங்​களில் தற்​காலிக விலை ஏற்​றம் எதுவும் இல்​லை.

சென்னை ஓட்​டல் சங்​கத்​தின் செய​லா​ளர் ராஜ்கு​மார்: சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டைச் சமாளிக்க உணவகங்​களை எஸ்மா சட்​டத்​தின் கீழ் கொண்டுவர வேண்​டுமென முதல்​வரிடம் கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யத் தேவை​யாக கருதி தடையற்ற சிலிண்​டர் விநி​யோகத்தை உறுதி செய்ய முடி​யும்.

வழக்​க​மாக முன்​ப​திவு செய்த அன்றே சிலிண்​டர் கிடைக்​கும். ஆனால், தற்​போது 2 முதல் 3 நாட்​கள் வரை தாமத​மாவ​தால், கையிருப்​பில் உள்ள சிலிண்​டர்​களைக் கொண்டு இன்​னும் 2 நாட்​களுக்கு மட்​டுமே உணவகங்​களை இயக்க முடி​யும்.

தென்​மண்டல எல்​பிஜி டிரான்​ஸ்​போர்ட் உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் சுந்​தர்​ராஜன்: போர் காரண​மாக வெளி​நாடு​களில் இருந்து கப்​பல்​களில் மூல​மாக வரும் காஸ் மட்​டுமே பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. வழக்​க​மாக 100 முதல் 120 லாரி​கள் இயக்​கப்​படும் நிலை​யில், தற்​போது அதில் 20 சதவீதம் குறைந்​துள்​ளது.

எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் இருந்து பெறப்​படும் காஸ் தற்​போது வரை பாதிப்பு ஏதும் ஏற்​பட​வில்​லை. மேலும், ரஷ்​யா​வில் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கப்பட உள்​ள​தால், அதிலிருந்து சீரான உற்​பத்தி இருக்​கும் என எதிர்​பார்க்​கிறோம்.

தமிழ்​நாடு ஆட்டோ தொழிலா​ளர் சம்​மேளனம் (சிஐடி​யு) செயல் தலை​வர் பாலசுப்​ரமணி​யம்:

ஆட்​டோக்​களில் பெட்​ரோலில் இருந்து எரி​வா​யுக்கு மாற்​றப்​படும் போது அதில் பல சிக்​கல்​கள் இருந்​ததை அரசிடம் வலி​யுறுத்​தினோம். ஆட்டோ ஓட்​டுநர்​களை பொறுத்​தவரை ஏற்​க​னவே காஸ் நிரப்ப அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை காத்​திருக்க வேண்​டிய நிலை​யுள்​ளது.

தற்​போது தட்​டுப்​பாடு ஏற்​படும் பட்​சத்​தில் அரை நாள் வரை கூட காத்​திருக்க வேண்​டிய நிலை ஏற்​படும். இதனால் வாழ்​வா​தா​ரம் கடுமை​யாக பாதிக்​கப்​படும்.

சென்னை பெருநகர டீக்​கடை உரிமை​யாளர் சங்​கம் பொதுச்​செய​லா​ளர் சுந்​தரம்: சென்​னை​யில் சுமார் 10 ஆயிரம் டீக்​கடைகள் இயங்கி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக, டீக்​கடைகளை மூடக்​கூடிய சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

நேற்று வரை கள்​ளச்​சந்​தை​யில் கூட ஓரளவு விலை உயர்த்​தப்​பட்​டாலும் சிலிண்​டர்​கள் கிடைத்​தன. ஆனால், இன்​றைக்கு காஸ் விநி​யோகம் சுத்​த​மாக நிறுத்​தப்​பட்​டு​விட்​டன. இதனால், சிறு வியா​பாரி​களின் வாழ்​வா​தா​ரம் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

அடை​யாறு ஆனந்த பவன் உரிமை​யாளர் சீனி​வாச ராஜா: வீடு​கள், மருத்​து​வ​மனை​கள்,கல்​லூரி​களுக்கு மட்​டுமே முன்​னுரிமை அளிக்க மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ள​தால், உணவகங்​களுக்​கான விநி​யோகம் நேற்று முதல் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் உணவகங்​களின் வேலை நேரத்​தைக் குறைக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது. மின் அடுப்​பு​களைப் பயன்​படுத்​துபவர்​கள் மட்​டுமே தற்​போது தப்​பித்து வரு​கின்​றனர்.

தமிழ்​நாடு பெட்​ரோலி​யம் டீலர்ஸ் சங்​கத்​தின் தலை​வர் கே.பி.​முரளி: போர் காரண​மாக தற்​போது காஸ் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு ஏற்​படுமா என்​பதை தற்​போதைக்கு கூற முடியாது.ஒரு​வாரம் கழித்து தான் நிலைமை என்ன என்​பது தெரிய​வரும்.

ராம் பரணி, ஐடி ஊழியர்: முன்பு சிலிண்​டர் புக் செய்​தால் 3 நாட்​களில் வீட்​டுக்கு வந்​து​விடும். ஆனால், இப்​போது 10 நாளாகி​யும் கிடைப்​ப​தில்​லை. ஏஜென்​சிக்கு போன் செய்து கேட்​டால், ‘லோடு வரல, வந்​ததும் தரோம்​’னு ஒத்த வரி​யில பதிலைச் சொல்​கின்​றனர். திடீரென சிலிண்​டர் தீர்ந்​து​விட்​டது. பேக்​கப் சிலிண்​டரும் இல்​லை.

ஜி.கே.​முரளிதரன், தனி​யார் நிறுவன ஊழியர்: காஸ் ஏஜென்​சிகளில் ஸ்டாக் இல்லை என போர்டு மாட்டி வைத்​திருக்​கிறார்​கள்.

ஓட்​டலில் வாங்கி சாப்​பிடலாம் என்​றாலும் அங்​கும் காஸ் தட்​டுப்​பாடு காரண​மாக உணவு சரி​யாக கிடைக்​க​வில்​லை. இதனால் வயதானவர்​கள், குழந்​தைகள் இருக்​கும் வீடு​களில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது.

எஸ்​.சிவகிருஷ்ணன், எல்​ஐசி முகவர், பல்​லா​வரம்: காஸ் அடுப்​பிலேயே சமைத்து பழகி​விட்​டோம். அவசர தேவைக்​காக உடனே விறகு அடுப்​புக்கு மாற இயலாது. ஓட்​டல்களி​லும் காபி, டீ மற்​றும் உணவு பொருட்​களின் விலை உயரும். நினைத்​தாலே சற்று அச்​ச​மாக​தான் இருக்​கிறது.

எஸ்​.​வாசுகி, ஓய்​வு​பெற்ற தலைமை ஆசிரியை, முகப்​பேறு: தட்​டுப்​பாடு வந்​தால் சிலிண்​டர் விலை அதி​கரிக்​கும்.

காஸ் பிரச்​சினையை எதிர்​கொள்ள நாமும் உடனே மாற்று வழி​முறைக்கு மாறிக்​கொள்ள வேண்​டியது​தான்.

ஒரே நேரத்​தில் தேவை​யானதை சமைத்து ஹாட் பாக்​ஸில் வைத்​துக் கொள்​ளலாம். மின்​சார ஸ்டவ் வாங்கி பயன்​படுத்​தலாம்.

ஸ்வீட்​லின் பிர​பாகரன், குடும்​பத்​தலை​வி, திரு​மங்​கலம்: தொலைக்​காட்​சிகளில் காஸ் தட்​டுப்​பாடு என்ற செய்​தி​கள் வந்​து​கொண்​டிருப்​பதை பார்க்​கும்​போது சற்று கலக்​க​மாக​தான் இருக்​கிறது. காஸ் இல்​லா​விட்​டால் விறகு அடுப்​புக்கு மாறி​விட​வும் முடி​யாது.

உடனடி தேவைக்​காக இண்​டக்​சன் ஸ்ட்வ் பயன்​படுத்​தலாம். அடித்​தட்டு மக்​கள் தெரு​வில் அடுப்பு வைத்து சமைத்​துக் கொள்​வார்​கள். ஆனால், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களில் அது​போன்​றும் செய்ய முடி​யாது.

வாழை இலை வியா​பாரி சங்​கரேஸ்​வரன்: சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் தி.நகரில் மட்​டும் பல்​வேறு கடைகளில் உணவு விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. தினசரி தி.நகரில் மட்​டும் 5000 வாழை இலைகள் ஹோட்​டல்​களுக்கு விநி​யோகம் செய்​யப்​படு​வது வழக்​கம்.

சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் நேற்று வெறும் 1,500 இலைகள் மட்​டுமே விநி​யோகிக்​கப்​பட்​டன. ஹோட்​டலை சார்ந்த மற்ற தொழில்​களும் பாதிக்​கப்​படு​கிறது.

தமிழ்​நாடு ஐடி ஊழியர்​கள் விடுதி மற்​றும் பீஜி உரிமை​யாளர் சங்​கத்​தினர் கூறுகை​யில், “சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக சென்​னை​யில் உள்ள விடு​தி​களில் இனி டீ, காபி வழங்​கப்​ப​டாது.

அதே​போல் சப்​பாத்​தி, தோசை​யும் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அதற்கு பதிலாக எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்​கள் வழங்​கப்​படும்.

குரு​மா, சாம்​பாருக்கு பதிலாக சட்னி வழங்​கப்​படும். வாரத்​தில் இரு நாட்​கள் அப்​பளம் அல்​லது முட்டை வழங்​க​வும் முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. மறு அறி​விப்பு வரும் வரை இந்த உணவு வகைகளே பின்பற்றப்படும்” என்று தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *