தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!!

சென்னை:
அரசுப் பயண​மாக டெல்லி சென்​றுள்ள தமிழக முதல்​வர் விஜய், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் மற்​றும் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்​தித்து பேசி​னார். இன்று நடை​பெறும் நிதி ஆயோக் கூட்​டத்​தில் பங்கேற்கிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக தலை​வர் விஜய், கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார்.

அதன்​பின் அரசுப் பயண​மாக கடந்த மே 27-ம் தேதி முதல் முறை​யாக முதல்​வர் விஜய் டெல்லி சென்​றார். அங்கு பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​து, பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை வழங்​கி​னார்.

தொடர்ந்து மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை​யும் சந்​தித்த முதல்​வர் விஜய், தமிழகத்​துக்​குத் வேண்​டிய நிலுவை நிதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டு​கோள் விடுத்​தார்.

பின்​னர் டெல்லி பயணத்தை முடித்​துக் கொண்டு மறு​நாளே சென்னை திரும்​பி​னார்.

இந்​நிலை​யில் 2-வது முறை 3 நாள் அரசுப் பயண​மாக முதல்​வர் விஜய் நேற்று டெல்லி சென்​றார்.

சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் நேற்று காலை 10 மணிக்​குப் புறப்​பட்டு டெல்லி சென்​றடைந்த முதல்​வர் விஜய், முதலில் அங்​குள்ள தமிழக அரசின் இல்​லத்​துக்​குச் சென்​றார்.

அங்கு அவரை தமிழக அரசு அதி​காரி​கள் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றனர். தொடர்ந்து அவருக்​கு காவல் துறை​யின் அணிவகுப்பு மரி​யாதை வழங்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *