கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: சிவராஜ் சிங் சவுகான் நெகிழ்ச்சி!!

புதுடெல்லி:
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு (MGNREGA), மாற்றாக, ‘விக்சித் பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G) எனும் திட்டத்தை மத்திய அரசு சட்டமாக இயற்றி உள்ளது. இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள்.

முன்னெப்போதும் இல்லாத ஒரு நாள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விபி ஜி ராம் ஜி திட்டம் இன்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது வெறும் ஒரு சட்டம் மட்டுமல்ல. லட்சக்கணக்கான கிராமப்புற தொழிலாளர் சகோதர – சகோதரிகளின் கண்ணியம், சுயமரியாதை, பாதுகாப்பான வாழ்வாதாரம் ஆகியவற்றை அளிப்பதில் ஒரு புதிய அத்தியாயமாகும். இனி, கிராமப்புறக் குடும்பங்கள் 100 நாட்கள் அல்ல 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கான உரிமையைப் பெறுவார்கள்.

இத்திட்டம் கிராமங்களில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும், நிலையான சொத்துக்களை உருவாக்குவதை விரைவுபடுத்தும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும், சுயசார்பு கிராமப்புற இந்தியாவை உருவாக்குவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வளம் மிக்க, அதிகாரமளிக்கப்பட்ட, சுயசார்பு கொண்ட கிராமங்களை உருவாக்குவதில் நாம் அனைவரும் பங்கேற்பாளர்களாக இணைவோம்” என தெரிவித்துள்ளார்.

ஐந்து மாற்றங்கள்: புதிய திட்டம், முன்பிருந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஐந்து அடிப்படை மாற்றங்​களைக் கொண்டு​வந்துள்ளது.

முதலா​வதாக, ஆண்டுக்கு 100 நாட்கள் என்கிற வேலைவாய்ப்பு 125 நாட்களாக உயர்த்​தப்​பட்​டுள்ளது.

இரண்டாவதாக, விவசாயச் சங்கங்​களின் நீண்ட காலக் கோரிக்கை யை ஏற்று, பயிர்ச் சாகுபடிக் காலங்​களில் நிலவும் கூலித் தொழிலாளர் தட்டுப்​பாட்டைப் போக்க ‘வேளாண் இடைவேளை’ (Agricultural Pause) அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்ளது.

மூன்றாவதாக, முற்றிலும் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இத்திட்டம், இனி மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பங்கீட்டுடன் (60:40) செயல்​படும்.

நான்காவதாக, நிதி ஒதுக்கீடு என்பது மாநிலத்தின் வெறும் கோரிக்கையின் அடிப்​படையில் அல்லாமல், மாநிலத்தின் வறுமை நிலையை அடிப்​படை​யாகக் கொண்டு அமையும்.

இறுதியாக, இவை அனைத்தும் ‘விக்சித் கிராமப் பஞ்சா​யத்து’ திட்டத்தின் கீழ் ஒருங்​கிணைக்​கப்​படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *