காலை 11 மணி நிலவரப்படி 24.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது – என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 24.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல், ஆந்திராவில் 23 சதவீதமும், ஒடிசாவில் 23.28 சதவீத வாக்குகளும் பதிவாகின.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *