தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள் ளதாக வானிலை மையம் ஆய்வு!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர்) வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *