மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு வருகிறார் – பிரதமர் நரேந்திர மோடி!!

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தார். இந்நிலையில் இந்தமுறை வாக்கு எண்ணிக்கைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரிக்கு சென்று, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *