ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டவுடன் அதிலிருந்து மீண்டுவர உடனடியாகப் பயிற்சிகளைச் செய்யுங்க…..

பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தசைகளை அசைப்பதில் சிரமம் ஏற்படலாம்.

பக்கவாதத்திலிருந்து மீண்டு வர நீண்டகாலம் எடுக்கலாம். அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம்.

“கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் உடற்பயிற்சிகளைத் தினமும் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதுமட்டுமல்லாது வலி, வீக்கம் ஆகியவற்றை அது குறைக்க உதவும். மேலும் தசைகளுக்கு வலுவூட்டும்.

ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டவுடன் அதிலிருந்து மீண்டுவர உடனடியாகப் பயிற்சிகளைச் செய்வது முக்கியம். அவ்வாறு செய்தால் குணமடைவது மட்டுமல்லாது இரண்டாவது முறையாகப் பக்கவாதம் ஏற்படும் சாத்தியத்தைத் தவிர்க்கலாம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீளும் நோக்கத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர் ஒருவர் இருப்பது முக்கியம்.

அப்போது தான் உடற்பயிற்சி செய்யும்போது அவர் கீழே விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *