முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு !!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

கடந்த 5 ஆம் தேதி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.

கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை தடுக்கத் தவறினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும் என்று திருமாவளவன் வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

நீட் தேர்வு ரத்து, குற்றவியல் சட்டங்களை சீரமைக்க கோரிக்கை, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு தொடர்பாகவும் முதலமைச்சரிடம் திருமாவளவன் மனு அளித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *