திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற நடிகை ரோஜாவின் செயலால் அதிர்ச்சியான தூய்மை பணியாளர்கள்!!

நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சருமான ரோஜா திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு தரிசனம் முடித்து கிளம்பும் தருவாயில் அங்கிருந்த தூய்மை பணியாளர்களான பெண்கள் இரண்டு பேர் ரோஜாவை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உற்சாகமாக அருகில் செல்ல அதற்கு ரோஜா தூரமாக நில்லுங்கள் என்று சொல்லும் வகையில் கையை காட்டினார்.

இதனால் தள்ளி நின்று கொண்டு தூய்மை பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அவர்கள் முகத்தில் முன்னிருந்த சந்தோசம் அவர்கள் முகத்தில் இல்லை.

இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.


இதனால் சமூக வலைத்தளங்களில் ரோஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *