மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!!

மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவருக்கு மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க கோரியும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *