சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து – இல்லத்தரசிகள் கவலை!

சென்னை:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.56,720க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1,00,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *