திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
கோவிலில் அமைந்துள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார்.
அமலாபாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.