விக்கல் ஏற்பட என்ன காரணம்?

மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். இது மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும் துணை செய்கிறது. இந்த தசைப்பகுதி திடீரென விரிந்து சுருங்கும் போது விக்கல் ஏற்படுகிறது.

காரணங்கள்
ஜீரணக் கோளாறு, குறைந்த அளவு புரதச்சத்துள்ள உணவுகளை எடுப்பது, கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகமாக உட்கொள்வது, அதிக காரத்துடன் உணவை எடுத்துக் கொள்வது, மாவுப் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது, ருசியான சாப்பாடு என்று மூச்சு விடக் கூட முடியாதபடி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, வேகவேகமாக சாப்பிடுவது போன்றவற்றால் இந்த தசைப்பகுதி சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிறது.

கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு ரத்தத்தில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படாமல் தேங்கும் பொழுது, கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும். ஏனெனில் பெர்னிக் என்னும் நரம்பு கழுத்து தண்டுவடத்திலிருந்து ஆரம்பித்து மார்புப் பகுதிக்குள் உதரவிதான தசை வரை வருகிறது.

கண் சிவத்தல், கண்ணீர் வருதல், தொண்டை வறட்சி மற்றும் தொடர்ந்து விக்கல் ஏற்படும் போது வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவது உண்டு. தொடர்ச்சியாக விக்கல் இருந்தால் இது பல பிரச்சினைகளுக்கான எச்சரிக்கையாக இருப்பதால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
விக்கலை தடுக்கும் முறைகள்:

1) மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். இதனால் தான் மூச்சை இழுத்துப் பிடித்தாலோ, தம் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்று விடுகிறது.


2) தண்ணீரை வேகமாக குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது நாம் மூச்சு விடுவதில்லை. அப்போது உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவதால் விக்கலும் நின்றுவிடும்.

3) அதிர்ச்சியாக ஏதாவது பேசினால் நாம் திடீரென விக்கித்துப் போய்விடுவோம். அதன் பலனாகவும் விக்கல் நின்று விடும்.


4) சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனில் சாப்பிட விக்கல் நின்று விடும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *