பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் அண்ணாமலைக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்!!

சென்னை,
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதைபோல மத்திய இணை மந்திரி எல்.முருகனும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“என் மண் என் மக்கள்’ யாத்திரையின் மூலம், பாஜக மக்கள் பணிகளை தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்த, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் அண்ணாமலைக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் அரசியல் மற்றும் சமுதாயப் பணிகள் மென்மேலும் தொடர்ந்திடவும், நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *