கோவை மிருக வதைத்தடுப்பு சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா!!

கோவை,

கோவை மிருக வதைத்தடுப்பு சங்கத்துக்கான புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (எஸ்பிசிஏ) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த புதிய அலுவலகத்தை கலெக்டரும் எஸ்பிசிஏ தலைவருமான பவன் குமார் கிரியப்பனவர் திறந்து வைத்தார்.

இவ்விழாவுடன் இணைந்து ஆர்ஐடி 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்படுகிறது. சமூக விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

“இந்த சங்கம் இரக்கம், சேவை மற்றும் விலங்கு நலனுக்கான எங்கள் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என கோவை எஸ்பிசிஏ துணைத் தலைவர் அபர்ணா ஸுங்கு தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *