தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் ஏஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!!

கரூர்:
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்​றும் சம்​பவத்​தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை நடத்​தினர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி விஜய் பங்​கேற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.

மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​திருப்​பவர்​கள், பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள், தவெக வழக்​கறிஞர், மின் வாரி​யத்​தினர், பவர் கிரிட் கார்ப்​பரேஷன் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர்.

தற்​போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்​தவர்​கள் மற்​றும் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நெரிசலில் சிக்கி காயமடைந்த கரூர் வெங்​கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த தாய், மகளான உஷா, திவ்யா ஆகியோரின் வீட்​டுக்கு நேற்று சென்ற சிபிஐ அதி​காரி​கள், இரு​வரிட​மும் 2 மணிநேரத்​துக்​கும் மேலாக விசா​ரணை நடத்​தினர்.

மேலும், கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி)ஆகாஷ் ஜோஷி​யிட​மும் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *