பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3-வது இடம் !!

அரியலூர்:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில் 8769 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 97.25 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு அதிவேகமாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *