மகளிர் பிரீமியர் லீக் டி 20 தொடருக்​கான வீராங்​க​னை​கள் டெல்​லி​யில் இன்று மெகா ஏலம்!!

புதுடெல்லி:
மகளிர் பிரீமியர் லீக் டி 20 தொடருக்​கான வீராங்​க​னை​கள் மெகா ஏலம் டெல்​லி​யில் இன்று நடை​பெறுகிறது.

இந்த ஏலத்​துக்​கான பட்​டியலில் 194 இந்​திய கிரிக்​கெட் வீராங்​க​னை​கள், 83 வெளி​நாட்டு வீராங்​க​னை​கள் இடம் பெற்​றுள்​ளனர். 5 அணி​களில் விளை​யாடு​வதற்​காக 50 இந்​திய வீராங்​னை​கள், 23 வெளி​நாட்டு வீராங்​க​னை​கள் என மொத்​தம் 73 பேர் தேர்வு செய்​யப்பட உள்​ளனர்.

உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம் பெற்​றிருந்த சுழற்​பந்து வீச்சு வீராங்​க​னை​யான தீப்தி சர்​மாவை ஏலத்​தில் எடுப்​ப​தற்கு போட்டி நில​வக்​கூடும்.

வெளி​நாட்டு வீராங்​க​னை​களில் ஆஸ்​திரேலி​யா​வின் மெக் லேனிங், அலிசா ஹீலி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், இங்​கிலாந்​தின் சோபி எக்​லஸ்​டோன், நியூஸிலாந்​தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வோல்​வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்​க​வும் அணி​கள் இடையே போட்​டி நில​வக்​கூடும்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *