இலங்​கை​யில் டிட்வா புயலுக்கு 200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழப்பு!!

இலங்​கை​யில் டிட்வா புயலுக்கு 200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். மேலும், 25,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு​களை இழந்து நிற்​க​தி​யான நிலைக்கு ஆளாகி உள்​ளனர்.

இலங்​கை​யில் டிட்வா புயல் கடுமை​யான சேதத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தலைநகர் கொழும்​பு​வில் நேற்று பெய்த கனமழைக்கு நகரம் முழு​வதும் வெள்​ளக்​கா​டாக காட்​சி​யளித்​தன. இதுகுறித்து அதி​காரி​கள் கூறும்​போது:

டிட்வா புயல் இலங்​கை​யின் மத்​திய பகு​தியை கடுமை​யாக பாதித்​துள்​ளது. மண்​சரிவு மற்​றும் மரங்​கள் வேரோடு பெயர்ந்து விழுந்​த​தால் சாலை களில் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனை அப்​புறப்​படுத்​தும் பணி​யில் பேரிடர் மேலாண்மை மைய (டிஎம்​சி) குழு​வினர் ஈடு​பட்​டுள்​ளனர்.

228 பேர் காணவில்லை: வெள்​ளம், மண்​சரி​வில் சிக்கி இது​வரை சுமார் 200 -க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். காணா​மல் போன 228 பேரை தேடும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. 25,000-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​களை இழந்து தவிப்​பில் உள்​ளன.

வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் இருந்து 1,47,000 பேர் மீட்​கப்​பட்டு அரசு அமைத்​துள்ள தற்​காலிக நிவாரண முகாம்​களில் தங்​கவைக்​கப்​பட்​டுள்​ளனர்.

கெலனி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் கொழும்​பு​வின் வடக்கு பகுதி முழு​வதும் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளது. மக்​களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

டிட்வா புயல் நேற்​று​முன்​தினம் இந்​தி​யாவை நோக்கி நகர்ந்​ததையடுத்து மீட்​புப் பணி​கள் வேகப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​திய விமானப் படை: இலங்​கை​யில் மீட்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக ஆபரேஷன் ‘‘சாகர் பந்​து’’ பெயரில் நிவாரணப் பணி​களை மேற்​கொள்​வதற்​காக சேட்​டக் ஹெலி​காப்​டர்​கள் ஐஎன்​எஸ் விக்​ராந்த் கப்​பலில் இருந்து அனுப்பி வைக்​கப்​பட்​டன.

இந்​தி​யா-இலங்கை இடையே வலிமை​யான நட்​புறவை எடுத்​துக்​காட்​டும் வித​மாக நெருக்​கடி​யான இந்த நேரத்​தில் இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே விமானம் நிவாரணப் பொருட்​களை ஏற்​றிக்​கொண்டு நேற்று காலை 10 மணி​யள​வில் கொழும்பு விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கியது.

வெளி​யுறவு துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறுகை​யில், “இலங்​கை​யில் வெள்ள நிவாரணப் பணி​களில் அந்​நாட்டு அதி​காரி​களு​டன் இணைந்து இந்​தி​யா​வின் என்​டிஆர்ப் குழு​வினர் தொடர்ந்து பணி​யாற்​று​வர்’’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *