விவ​சா​யிகளை இந்​தச் சமூகம் பெரிதாகக் கவனிப்​ப​தில்​லை; அவர்​களை முறை​யாக அங்கீகரிப்பதில்லை – நடிகர் கார்த்தி!!

விவசா​யத் துறைக்​காக உழைக்​கும் மனிதர்​களை​யும், அமைப்​பு​களை​யும் கவுர​வித்து அங்​கீகரிக்​கும் உழவன் ஃபவுண்​டேஷனின் ‘உழ​வர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்​னை​யில் நடை​பெற்​றது.

இந்த விழா​வில் நடிகரும் உழவன் ஃபவுண்​டேஷனின் நிறுவனரு​மான கார்த்தி, நடிகர் சிவகு​மார், ரவி மோகன், ரேவ​தி, கருணாஸ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். பேராசிரியர் சுல்​தான் அஹ்மது இஸ்​மா​யில், அனந்து ஆகியோ​ரும் விழா​வில் பங்கேற்​றனர்.

சிறந்த விவ​சாயி விருது கோவில் பட்​டியைச் சேர்ந்த பழனியம்​மாளுக்​கும் சிறந்த வேளாண் பங்​களிப்பு விருது மதுரையைச் சேர்ந்த பாமயனுக்​கும் சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது வேலூர் மக்​கள் நலச்​சந்​தைக்​கும் நீர்நிலைகள் மீட்​டெடுத்​தலுக்​கான சிறந்த பங்​களிப்பு விருது திருப்​பூர் ‘வேர்​கள்’ அமைப்​புக்​கும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கான விருது குன்​னூரைச் சேர்ந்த ‘க்​ளீன் குன்னூர்’ உள்​ளிட்ட அமைப்​பு​கள் மற்​றும் தனி​நபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது.

விருது பெற்றவர்களுக்கு சான்​றிதழ், கேட​யம் மற்​றும் ரூ.2 லட்​சம் மதிப்​பிலான காசோலை வழங்​கப்​பட்​டன.

விழா​வில் பேசிய கார்த்​தி, ‘‘விவ​சா​யிகளை இந்​தச் சமூகம் பெரிதாகக் கவனிப்​ப​தில்​லை; அவர்​களை முறை​யாக அங்கீகரிப்பதில்லை. அவர்​களுக்​கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரு​கிறது.

ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்​டும் ஒரு​போதும் நின்றுவிடவில்​லை. எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் விவசாயிகளுக்​காக​வும், விவ​சா​யத்​துக் காக​வும் அர்ப்பணிப்​புடன் செயல்​படு​பவர்​களை கொண்​டாட வேண்​டும்;

இந்த சமூகத்​துக்கு அவர்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும் என்​ப​தற்காகவே, தொடர்ந்து இந்த உழவர் விருதுகளை வழங்கி வருகிறோம்” என்றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *