குவாஹாட்டி:
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதைத் தொடர்ந்து நாக்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
டேவன் கான்வே 1, டிம் செய்பர்ட் 12, ரச்சின் ரவீந்திரா 4, கிளென் பிலிப்ஸ் 48, மார்க் சாப்மேன் 32, டேரில் மிட்செல் 14, மிட்செல் சான்ட்னர் 27, கைல் ஜேமிசன் 3, மேட் ஹென்ரி 1, இஷ் சோதி 2, ஜேக்கப் டஃப்பி 4 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3, ஹர்திக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2, ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
சஞ்சு சாம்சன் 0, இஷான் கிஷன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.