விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தைக் காக்​க​ வரும் 12-ல் நடை​பெறும் விவ​சா​யிகளின் நாடு தழு​விய போ​ராட்​டத்தை ஆதரிக்​கிறோம் – தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன்!!

சென்னை:
தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: மத்​தி​யில் மோடி தலை​மையி​லான அரசு 2014-ம் ஆண்டு பொறுப்​பேற்​றது முதல், இந்​தி​யா​வின் பொதுத்​துறை நிறு​வனங்​கள், இயற்கை வளங்​கள் மற்​றும் கோடிக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ர​மான விவ​சா​யம் என அனைத்​தை​யும் அந்​நிய நாடு​களுக்​கும், பெரு நிறு​வனங்​களுக்​கும் திட்​ட​மிட்​டுத் தாரை​வார்க்​கும் தேச விரோத செயலில் ஈடு​படு​கிறது.

டெல்​லி​யில் ஓராண்டு காலம் போராடிய விவ​சா​யிகளுக்கு கொடுத்த எந்த வாக்​குறு​தி​யை​யும் மத்​திய அரசு நிறைவேற்​ற​வில்​லை.

ஆனால், அமெரிக்க அதிபரின் வர்த்தக நலன்​களுக்​காக இந்​திய உழவர்​களை பலி​கொடுக்​கத் துணிந்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தைக் காக்​க​ வரும் 12-ல் நடை​பெறும் விவ​சா​யிகளின் நாடு தழு​விய போ​ராட்​டத்தை ஆதரிக்​கிறோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *