அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் தமிழகத்​தில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சி அமை​யும் – திருச்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் நம்பிக்கை!!

திருச்சி:
அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் தமிழகத்​தில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சி அமை​யும் என திருச்​சி​யில் நேற்று நடை​பெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்​கூட்​டத்​தில் தலை​வர்​கள் பேசினர்.

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திருச்​சி​யில் 2 தினங்​களுக்கு முன் நடந்த திமுக மாநாட்​டில் வரவிருக்​கும் தேர்​தல் தமிழ்​நாட்​டுக்​கும், டெல்​லிக்​கும் நடக்​கும் தேர்​தல் என்று ஸ்டா​லின் பேசி​னார். ஆனால் வரும் தேர்​தல் குடும்ப ஆட்​சிக்கு முடிவு கட்​டும் தேர்​தல்.

பிரதமர் தமிழகம் வரும்​போதெல்​லாம் தாய்​மாமன் வீட்டு சீர் போல ஏதாவது திட்​டங்​களை கொண்டு வந்து தரு​வார். அந்​தவகை​யில் இன்று திருச்​சி​யில் ரூ.5,500 கோடி மதிப்​பிலான திட்​டத்தை வழங்​கி​யுள்​ளார்.

கடந்த 11 ஆண்​டு​களில் ரூ.14 லட்​சம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களை தமிழகத்​துக்கு வழங்​கி​யுள்​ளார். திமுக குடும்ப ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​பி​விட்டு தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சியை தமிழகத்​தில் மலரச் செய்ய வேண்​டும்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: குஜ​ராத்​துக்​கும், தமிழகத்​துக்​கும் ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன்பே தொடர்பு இருந்​துள்​ளது. சங்க இலக்​கி​யங்​கள் இதை குறிப்​பிட்​டுள்​ளன. வேளிர் எனப்​படும் தமிழக மன்​னர்​கள் ஆண்ட திரா​விட மண் குஜ​ராத்.

குஜ​ராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்​கும், தமிழகத்​துக்​கு​மான உறவு தொப்​புள் கொடி உறவு. மக்​கள் விரோத ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​பி​விட்டு தே.ஜ. கூட்டணி ஆட்​சியை கொண்டு வர அனைவரும் உறுதி ஏற்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வில் அதி​களவு கொலைகள், தற்​கொலைகள், சாலை விபத்​துகள் நிகழும் மாநில​மாக தமிழகம் இருக்​கிறது. இதற்கு போதைப் பொருட்​கள் அதி​கரித்​துள்​ளதே காரணம். கடந்த 5 ஆண்​டு​களில் சுமார் 22 லட்​சம் கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுத​விர அபின் உள்​ளிட்ட பல்​வேறு போதைப்​பொருட்​களின் புழக்​கம் உள்​ளது. எனவே, மக்​கள் விரோத திமுக ஆட்​சியை விரட்டி பழனி​சாமியை முதல்​வ​ராக தேர்ந்​தெடுங்​கள்.

கூட்​டத்​தில், ஐஜேக தலை​வர் பாரிவேந்​தர், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ்​கோயல், எல்​.​முரு​கன், பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை, நடிகர் சரத்​கு​மார், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், இந்​திய ஜனநாயக கட்சி தலை​வர் ரவி பச்​ச​முத்​து, தமிழக மக்​கள் முன்​னேற்ற கழக தலை​வர் ஜான்​பாண்​டியன், புரட்சி பாரதம் தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்​தி, அகில இந்​திய பார்​வர்டு பிளாக் கட்சித் தலை​வர் திரு​மாறன், பெருந்​தலை​வர் காம​ராஜர் மக்​கள் கட்சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், முத்​தரையர் முன்​னேற்ற சங்கத் தலை​வர் ஆர்​.​

விசுவ​நாதன் உள்​ளிட்ட கூட்​டணி கட்​சி​யினர் பங்​கேற்​றனர். முன்​ன​தாக கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, தங்​கமணி, கே.பி.​முனு​சாமி, சி.​விஜய​பாஸ்​கர், காம​ராஜ், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், ஓ.எஸ்​.மணி​யன் உட்பட பலர் கலந்து கொண்​டனர்​.
….

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *