சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன் ஆகியோருக்கு ஹால் ஆஃப் ஃபேம்’ கவுரவம் வழங்கப்பட்டது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் நேற்றுரோர் 26′ நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் சிஎஸ்கே வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன் ஆகியோருக்கு `ஹால் ஆஃப் ஃபேம்’ கவுரவத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் வழங்கியது.
சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் முதன்முறையாக ஹால் ஆஃப் ஃபேம்’ எனப்படும் வீரர்களுக்கு உரிய கவுரவம் அளிப்பது தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர்களைஹால் ஆஃப் ஃபேம்’ எனப்படும் கவுரவம் அளித்து பாராட்டுவது கிரிக்கெட்டில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
2010, 2011, 2018, 2021-ம் ஆண்டுகளில் அணி கோப்பையை வென்றபோது அதில் இடம்பிடித்திருந்தவர் சுரேஷ் ரெய்னா.
சுரேஷ் ரெய்னா 2008-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
மேலும் சிஎஸ்கே அணி, 2010, 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் பட்டம் வென்றபோதும் அந்த அணியில் இடம்பிடித்தவர் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மேத்யூ ஹேடன் 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். 2010-ல் சிஎஸ்கே கோப்பையை வென்றபோது அவர் அணியில் இடம்பிடித்திருந்தார் ஹேடன்.