மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் உச்ச நிகழ்​வான கள்​ளழகர் ஆற்​றில் எழுந்​தருளும் வைபவத்​துக்​காக வைகை அணையி​லிருந்து கால்​வாய் வழியே தண்​ணீர் திறப்பு!!

ஆண்​டிபட்டி:
மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் உச்ச நிகழ்​வான கள்​ளழகர் ஆற்​றில் எழுந்​தருளும் வைபவத்​துக்​காக வைகை அணையி​லிருந்து நேற்று கால்​வாய் வழியே தண்​ணீர் திறந்து விடப்​பட்​டது.

மதுரை​யில் சித்​திரை திரு​விழான் முக்​கிய நிகழ்​வாக மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும் வைபவம் நடை​பெற உள்​ளது.

இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​பர் என்​ப​தால், வைகை அணை​யில் இருந்து தண்​ணீர் திறக்க தமிழக அரசு உத்​தர​விட்​டது.

இதன்​படி மொத்​தம் 170 மில்​லியன் கனஅடி நீர் திறக்க நீர்​வளத் துறை அரசாணை வெளி​யிட்​டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் விநாடிக்கு 500கனஅடி நீர் திறக்​கப்​பட்​டது.

அணை​யின் சிறிய மதகு​கள்வழியே வெளி​யேறிய நீர், முதலக்​கம்​பட்டி பிக்​-அப் அணை​யில் இருந்து கால்​வாய் வழியே திருப்பி விடப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்து வாய்க்​கால் வழியே மதுரை செல்​லும் இந்த நீர் செல்​லூர் கண்​மா​யில் தேக்​கப்​பட்டு பின்பு ஆற்​றில் மீண்​டும் கலக்​கும்.

வரும் 29-ம் தேதி வரை தொடர்ந்து நீர் திறக்​கப்படும். இணைப்புக் கால்​வாயில் இறங்​கவோ, குளிக்​கவோ வேண்​டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்​வளத்​துறை​யினர் கூறுகை​யில், வைகை அணை​யில் இருந்து மதுரை வரையி​லான வைகை ஆறு வறண்டு கிடக்​கிறது.

வெயிலும் சுட்​டெரிப்பதால், தொடக்​கம் முதல் கடைசிவரை ஆற்​றில் தண்​ணீர் திறந்​து​விட்​டால் வழி​யிலேயே நீர் உறிஞ்​சப்​படும். ஆகவே சிமெண்ட் கால்​வா​யில் தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால் நீர் விர​யம் இருக்காது. இதன்மூலம் குடிநீர்திட்​டக் கிணறுகளின்​ நீர்​ ஆதா​ர​மும்​ உயரும்​ என்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *