தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக, முன்​னாள் அமைச்​சர் வளர்மதியின் கணவர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு!!

சென்னை:
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக, முன்​னாள் அமைச்​சர் வளர்மதியின் கணவர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அப்​போது ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் வளர்​ம​தி​யின் கணவர் பாலசுப்​பிரமணி​யம் ​(79), அத்​தொகு​தி​யில் திமுகவினர் விதி​களுக்​குப் புறம்​பாக மஞ்​சள் நிற பூத்சிலிப்​பு​களை விநியோகம் செய்​வ​தாகக் குற்​றம்​சாட்டி அவர்​களைக் கண்​டித்​துள்​ளார்.

இதுகுறித்து போலீ​ஸில் அவர் புகார் அளித்தும், போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்​தி​யடைந்த பாலசுப்​பிரமணி​யம், வள்​ளுவர் கோட்​டம் சந்​திப்பு அருகே சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த போலீ​ஸார், மறியலில் ஈடு​பட்ட பாலசுப்​பிரமணி​யத்​தைச் சமா​தானப்​படுத்தி கலைந்து செல்​லு​மாறு கூறினர். இதனால் இருதரப்​புக்​கும் இடையே கடுமை​யான வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

அப்​போது, நுங்​கம்​பாக்​கம் காவல் நிலைய தலை​மைக் காவலர் அன்​பரசனை பாலசுப்​பிரமணி​யம் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து தலை​மைக் காவலர் அன்​பரசன் அளித்த புகாரின் அடிப்​படை​யில், பாலசுப்​பிரமணி​யம் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அதேசம​யம் நுங்​கம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர் தன்​னைத் தாக்​கிய​தாக பாலசுப்​பிரமணி​யம் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

சம்​பந்​தப்​பட்ட ஆய்​வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் அவர் நுங்​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் பதில் புகார் அளித்​துள்​ளார். இதுகுறித்​து போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *