கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள்: நடிகர் சங்கம் சார்பில் மலரஞ்சலி மரியாதை… !!

சென்னை:
மறைந்த புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்த விஜயகாந்த் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேரன்பைப் பெற்றவர்.

திரையுலகில் வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்டியாகவும், பசி என்று வந்தவர்களுக்கு உணவளித்து ஆதரவளித்த கொடைவள்ளலாகவும் அவர் திகழ்ந்தார்.

அவரது இந்த மனிதநேயப் பண்புகளை நினைவு கூர்ந்து திரைத்துறையினர் பெருமிதத்துடன் அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் பொறுப்பு வகித்த காலம் அதன் பொற்காலமாகக் கருதப்படுகிறது.

நடிகர் சங்கம் கடும் நிதி நெருக்கடியிலும் கடனிலும் மூழ்கியிருந்த சூழலில், கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அந்த நிதிச் சுமையை முழுமையாக மீட்டுத் தந்தார்.

திரைக்கலைஞர்களின் நலனுக்காகவும், நலிவடைந்த நடிகர் களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் ஆற்றிய தொண்டுகள் இன்றும் திரையுலகினரால் நன்றியோடு நினைவு கூரப்படுகின்றன.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில், நடிகர் சங்கத்தின் சார்பில் மலர் அலங்காரம் செய்யப் பட்ட விஜயகாந்தின் உருவப்படத்திற்கு தலைவர் நாசர், பொரு ளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது, எண்ணற்ற ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் தங்களுடைய நினைவஞ்சலிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *