அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து சாதனை!!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினர். 3வது ஓவரில் 23 ரன்னும், 5வது ஓவரில் 29 ரன்னும் குவித்தனர்.

அபிஷேக் சர்மா கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *