கொல்கத்தா:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு பெவிலியன் திரும்பினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் அவர் 2-வது இன்னிங்ஸிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனால் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஷுப்மன் கில் இல்லாத நிலையில், ரிஷப் பந்த் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார்.