அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படாத பாதாள சாக்கடை குழி…தவறி விழுந்த இளம்பெண் படுகாயம் … கோவையில் பரபரப்பு…

கோவை ;

கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காந்திபுரம் 100 அடி சாலையின் இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டது. பாதாள சாக்கடை மூடிகள் சிதிலமடைந்து இருந்ததால் அவற்றை அகற்றிவிட்டு புதிய மூடிகள் பொருத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

10 நாட்களாக பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையில் இருப்பது குறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கோவை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர் .

இந்நிலையில், நேற்று மாலை அந்தவழியே நடந்த சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்தார். காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதான நிலையில், கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதாள சாக்கடையின் அனைத்து குழிகளிலும் உடனடியாக சிலாப்புகள் போட்டு மூலம் குழிகளை மூடினர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதாள சாக்கடைக்குள் பெண் தவறி விழுந்த  சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *