சென்னை;
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
- அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.
- 8 வருடமாக கட்சியை உடைக்க திட்டமிடுகின்றனர்.
- அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது.
- அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி கொண்டு தான் இருக்கிறோம்.
- எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும்.
- மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதில் இருந்து திட்டத்தை போட்டுக்கொண்டு இருக்கிறார். அதனை முறியடித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.