எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தனர். நெடுந்தீவு அருகே மீனவர்களை கைது செய்ததுடன் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.