தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் நேற்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து வைத்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க கொடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக சென்னையை சேர்ந்த ஆர்.டி.ஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரள அரசு போக்குவரத்து சின்னமான யானை இருப்பதாகவும், ஸ்பெயினை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு தேசிய கொடி போன்று அமைத்துள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *