முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவன அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவன அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு உலகின் பல்வேறு முன்னணி நிறுவங்களின் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவன அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்மூலம் ஓசூரில் ரூ. 100 கோடி முதலீடு செய்கிறது அமெரிக்காவின் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனம்.

ஓசூரில் மேம்பட்ட மின்னணு , டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மெக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவன அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுவரை அமெரிக்க பயணத்தின் மூலம் 18 நிறுவனங்களுடன் ரூ. 7,616 கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *