தசரா திருவிழா: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் குவிந்த பக்தர்கள்!!

உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.

இத்திருவிழாவில் பக்தர்கள் வேடம் அணியும் முன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.

விரதம் தொடங்கும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புவை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை பிரித்து 10-ம் திருநாள் அன்று கோவிலில் சேர்ப்பார்கள்.

மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *