சிகிச்சை முடிந்து கண்விழித்த நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாக தகவல்!!

சிகிச்சை முடிந்து கண்விழித்த நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நேற்று மாலை அவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில், நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இரவு 10.30 மணியளவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ரஜினிக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுள்ளதாகவும், ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து சாய் சதீஷ், விஜய் சந்திரன், பாலாஜி ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருந்து வரும் ரஜினிகாந்த், இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிக்சை முடிந்து ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் கண்விழித்து பேசியதாகவும், தனக்கு சிகிச்சியளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *