கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு!!

ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது வலைகளை அறுத்தனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 12 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, கடந்த சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துமீன்பிடிப்பதாகக் கூறி, உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

பின்னர், 5-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளை வெட்டிச் சேதப்படுத்தினர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள், உடனடியாக கரைக்குத் திரும்பினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *