ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.

பாம்பனில் 19 சென்டி மீட்டர் மழை பொழிவால் வெள்ளக்காடாக மாறியது. ராமநாதபுரம் பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தேங்கிய மழைநீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை எனவும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளை நீர் சூழ்ந்ததால் உறக்கமின்றி தவிக்கும் மண்டபம் பகுதி மக்கள், அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *