உலக வலுதூக்கும் போட்டியில் தமிழக வீராங்கனை கஸ்தூரி தங்கம் வென்றார்!!

சென்னை:
உலக வலுதூக்கும் (பவர் லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள நோவோசிர்ஸக் நகரில் கடந்த 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். ஜூனியர் பிரிவில் 48 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற அவர் தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பெஞ்ச் மற்றும் டெட்லிப்ட் முறையில் மொத்தம் 105 கிலோ தூக்கி முதல் இடத்தை பிடித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த அவர் ரஷியாவில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பினார். தங்கம் வென்ற கஸ்தூரிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை மாவட்ட வலுதூக்கும் சங்க பொதுச்செயலாளர்கள் எஸ்.பகவதி மூத்த துணைத்தலைவர், எஸ்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறவினர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். சொந்த ஊரில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *