சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும்!!

மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(30.11.2024) அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்.

பெஞ்சல் (FENGAL) புயல் நாளை (30.11.2024) பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *