சென்னை தாம்பரம் அருகே பல்லாவரம் மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை அருந்திய பலர் மருத்துவமனையில் அனுமதி!! ஒருவர் பலி…..

சென்னை தாம்பரம் அருகே பல்லாவரம் மலைமேடு பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை அருந்திய பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. உட்கொண்ட உணவில் ஏதேனும் பிரச்சினையா என விசாரணை நடத்தி வருகிறோம்.

குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும் இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன காரணம் என்பது தெரிந்துவிடும். சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மழைக்காலம் என்பதால் தினமும் தூய்மைப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *