கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி!!

கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா, வாங் ஜி ஜோடியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 21-18, 21-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் காய் யான் யானிடம் 21-14, 13-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *