இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்!!

சென்னை :
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்து செல்கின்றனர். இதேபோல் தமிழக மீனவர்களின் வலைகள், மீன்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றையும் இலங்கைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்கு வந்தடைந்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 18 பேரை கடந்த 2ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *