சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!!

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் மலை அடி வாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.

இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறினர். 4 முதல் 5 மணிநேரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.

பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்

நாளை (26-ந் தேதி) இரவு சிவராத்திரி நாளை மறுநாள் மாசி மாத அமாவாசையை (28-ந் தேதி) முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். இதை யொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சிவராத்திரைய முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *