மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்​டா​லின்!!

சென்னை:
மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்​டா​லின், மக்கள் நலனை நீங்கள் கவனி​யுங்​கள். உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்​கிறது என்று உறுதி​யுடன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் அரசு மருத்​துவ​மனை​களில் காலி​யாக​வுள்ள காலிப்​பணி​யிடங்களுக்கு மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்​ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்​கும் விழா, சென்னை திரு​வான்​மியூரில் உள்ள ராமச்​சந்​திரா கன்வென்ஷன் சென்​டரில் நேற்று நடைபெற்​றது. இந்த விழா​வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்​டா​லின், 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்​கிடும் அடையாளமாக 25 மருத்​துவர்​களுக்கு ஆணைகளை வழங்​கினார்.

சுகா​தா​ரத்​துறை அமைச்சர் மா.சுப்​பிரமணி​யன், தென்​சென்னை நாடாளு​மன்ற உறுப்​பினர் தமிழச்சி தங்கபாண்​டியன், சட்டப்​பேரவை உறுப்​பினர் அசன் மவுலானா, சுகா​தா​ரத்​துறை செயலாளர் ப.செந்​தில்​கு​மார் உள்ளிட்​டோர் விழா​வில் பங்கேற்​றனர்.

விழா​வில், முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: தமிழகம் இன்றைக்கு இந்தியா​வின் மருத்துவ தலைநகராக இருக்​கிறது என்றால், அதற்கு திமுக ஆட்சி காலங்​களில் மறைந்த முன்​னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய மருத்​துவக் கட்டமைப்பு​தான் காரணம்.

இந்த கட்டமைப்பு சரியான முறை​யில் செயல்பட வேண்​டும் என்றால், நிச்​சயமாக அதற்​கேற்​றதுபோல மருத்​துவர்கள் தேவை. அதுவும் அரசு மருத்துவ​மனைக்கு வரக்​கூடிய ஏழை கிராமப்புற நோயாளி​களை, கர்ப்​பிணி பெண்​களை, குழந்தை​களின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்​களின் மனநிலை, புறச்​சூழல் இதையும் புரிந்​து​கொள்ள கூடிய மருத்​துவர்கள் தேவை​யாகும்.

கிராமத்​திலிருந்​தும், சின்னச் சின்ன நகரங்​களில் இருந்தும் மருத்​துவர்கள் உருவானால்​தான் அனைத்து தரப்பு மக்களுக்​கும் நல்ல முறை​யில் சிகிச்சை கிடைக்​கும். அதை புரிந்​து​கொண்​டு​தான், முதல் தலைமுறை பட்ட​தா​ரி​களின் மருத்துவ படிப்​புக்கான கல்வி கட்ட​ணத்தை அரசாங்கமே ஏற்றுக்​கொள்​ளும் என்கிற மகத்தான திட்​டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.

இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்​களில் இருந்​துகூட இத்தனை மருத்​துவர்கள் உருவாகி இருக்​கிறீர்கள் என்றால் அதற்​கெல்​லாம் வித்​திட்​டவர் கருணாநிதி. அவரது வழியில், திமுக அரசு மருத்துவ கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்​கூடிய அளவில் உருவாக்கி​யிருக்​கிறோம்.

மக்களைத் தேடி மருத்​துவத் திட்டம் தமிழகத்​தில் இருக்​கக்​கூடிய கோடிக்​கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்​களின் வாழ்​நாளை நீட்​டித்து இருக்​கிறது. “இன்னு​யிர் காப்​போம் நம்மைக் காக்​கும் 48” பல உயிர்​களைக் காப்​பாற்றி, அவர்​களை​யும், அவர்​களின் குடும்பத்​தினரை​யும் நிம்​ம​தியாக வாழ வைத்து கொண்​டிருக்​கிறது.

2 நாட்​களுக்கு முன்பு, தமிழகத்​தில் 1,000 முதல்வர் மருந்​தகங்கள் திறக்​கப்​பட்​டிருக்​கிறது. மக்களுக்கு அவசி​யமான தேவைப்​படும் மருந்​துகள் மிகவும் மலிவான விலை​யில் கிடைக்​கத்​தான் முதல்வர் மருந்​தகங்கள் இன்று இயங்​கிக் கொண்​டிருக்​கிறது.

மக்களின் உயிர் காக்கும் சேவை: இந்த மாநிலத்​தில் இருக்​கும் ஒவ்வொரு​வருக்​கும் உரிய சிகிச்சை கிடைக்க​வேண்​டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்​டும் என்று திமுக அரசு பல திட்​டங்களை கொண்டு வந்தா​லும், அதையெல்​லாம் செயல்​படுத்த வேண்​டும் என்றால், உங்களை போன்ற மருத்​துவர்​களின் பங்களிப்பு​தான் அதில் மிக மிக முக்​கி​யம்.

நீங்கள் செய்​யப்​போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்​கும் சேவை. சமுதா​யத்​துக்கான மிகப் பெரிய தொண்டு.

இனி, மக்கள் உங்களை நம்பி தங்கள் உயிர் காக்​கும் பொறுப்பை ஒப்படைக்கஇருக்​கிறார்​கள். அவர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, உங்​களுடைய சேவை அமைய​வேண்​டும்.

மக்​களுடைய நலனை நீங்​கள் கவனி​யுங்​கள். உங்​களுடைய நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது. உ​யிர்களை ​காக்​கும் தொண்​டாற்ற ​போகும் உங்​களுக்​குத் தேவை​யானவற்றை நிச்​ச​யம் செய்​வேன்​. இவ்​வாறு ​முதல்​வர்​ பேசினார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *