தமிழ்நாடு காவல்துறை அண்ணாமலை போல் டூப் போலீஸ் இல்லை – அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை
தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு. தேர்தலில் டெபாசிட்டை தக்கவைக்க போராடும் கட்சியை கண்டு திமுக ஏன் அச்சப்பட வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை அண்ணாமலை போல் டூப் போலீஸ் இல்லை. நாட்டுக்காக போராடுவதாகக் கூறும் அண்ணாமலையால் 5 மணி நேரம் காவலில் இருக்க முடியவில்லை.

எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணமான ஓராண்டிலேயே மிசாவில் கைதாகி சிறையில் கழித்தவர்.

அண்ணாமலை முதலில் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள முதலமைச்சரின் படத்தை அடித்து மாட்டட்டும்.

முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கான நாளை அண்ணாமலை குறிக்கட்டும்.

காவல்துறையினரே இல்லாமல் திமுக தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான். தமிழ்நாட்டின் சாபக்கேடு டூப் போலீசான அண்ணாமலை” என விமர்சித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *